Tamil Message With Lyrics
[00:23.00]
1. ஓ, என்னே! அங்கே, இரண்டு பரிசுத்த ஆவிகள் கிடையாது.
அன்றிரவு, அல்லது அந்த காலையில், சிமியோனை இயேசு கிறிஸ்துவண் டைக்கு வழி நடத்தின, அதே பரிசுத்த ஆவியானவர், இன்றிரவு, இங்கே, உங்களை வழி நடத்தியிருக்கிறார்,
[00:33.00] ஏனென்றால், 'பரிசுத்த ஆவியின் வாக்குத்தத்தத்தை நீங்கள், விசுவாசிக்கிறபடியினால் அவர், அன்று, சிமியோனுக்கு அனுகிரகம் செய்தது போன்று, அதேவிதமாக, உங்களுக்கும் செய்ய அவர் கடமைப்பட்டுள்ளார்.
[00:44.00] ஏனென்றால், அவர் தேவனாயிருக்கிறார், அவருடைய வார்த்தையை அவர் காத்துக்கொள்ள வேண்டியவராயிருக் கிறார்.
[00:50.00] அப்பொழுது, சிமியோன் தவிப்புடையவனாய், கிறிஸ்துவை காண வாஞ்சித்ததை, என்னால், யூகித்து பார்க்க முடிகிறது.
தேவனுடைய வார்த்தை, அவனிடத்தில் என்ன கூறினதோ, அதை அவன் விசுவாசித்தான்.
குறை கூறுபவர்கள் என்ன கூறினாலும், அதை அவன் அக்கரைகொள்ளாமல், தேவனுடைய வார்த்தை கூறியிருந்ததையே விசுவாசித்தான்.
கிறிஸ்துவை காணவேண்டுமென்ற ஏக்கம், அவன் உள்ளத்தில் இருந்தது, காணுவேன், என்று அவன் விசுவாசித்தான்.
தாவீது “ஆழத்தை ஆழம் கூப்பிடும்போது” என்று கூறினதுபோன்று, இங்கே இருக்கின்ற உங்களில், அநேகருக்கு தெய்வீக சுகத்தில் நம்பிக்கை இருக்கிறது அல்லவா?
தெய்வீக சுகத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
நீங்கள், தெய்வீக சுகத்தை விசுவாசிக் கின்றதின் காரணமே, தெய்வீக சுகம் என்று ஒன்று இருக்கிறது, என்பதை நிரூபிக்கிறது.
[01:26.00] 2. நாங்கள், அமெரிக்காவிற்கு வந்தபோது, அமெரிக்க இந்தியனை கண்டோம்.
அவன் சூரியன், சந்திரன் மற்றும் இயற்கை முதலானவைகளை ஆராதித்து வந்தான்,
ஏனென்றால், அவன் ஒரு மானிடனாய் இருந்த படியினால் அவனுக்குள், உருவாக் கினவர் ஒருவர் உண்டென்பதை அறிந்திருந்தான்,
எனவே, அந்த மனித இருதயத்திற்குள், ஏதோ ஒன்று இருந்து, அவனை ஆராதனை செய்ய வைக்கிறது.
அது, அழிந்து போகிற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு. நீங்கள், உங்கள் மோட்டார் வாகனத்தையோ,
உங்களுடைய உத்யோகத்தையோ, உங்களுடைய வீட்டையோ, அல்லது ஏதாவது ஒரு காரியத்தை ஆராதிக்கக்கூடும். நீங்கள், ஏதோவொன்றை ஆராதிப்பீர்கள், எனவே, அங்கு ஏதாவது விக்கிரகமாக இருக்குமாயின், அதை வெளியே எடுத்துபோட்டு, இயேசு கிறிஸ்துதாமே முதலிடத்தை வகிக்கும்படி செய்யுங்கள். அவர் எல்லாவற்றிலும், முதன்மையான இடத்தை பெற்றவ ராய் இருக்கட்டும்.
...